ஆளுநர் மாளிகையின் மரியாதை?

Viduthalai
1 Min Read

இந்தியா

மும்பை, ஜன.24- மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மனைவியான அம்ருதா பட்னவிஸ் தனது ஆண் நண்பருடன் அரசு மாளிகையில் ஆடிக்கொண்டு இருந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்ப, எதிர்க் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆளுநரின் பணி என்ன என்று தெரியாதா என கேள்வி எழுப்ப, ஆளுநர் மாளிகையின் புனிதத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் ஆளு நர் பதவி விலகவிருப்பம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது

அம்ருதா பிட்னவிஸ் அரசு பணியாளர்கள் ஊதிய விவகாரம் தொடர்பான பிரச்சினை மற்றும் மராட்டியப் பெண்கள் ஆடையில்லாமல் இருந்தால் அழகாக இருப்பார்கள் என்பதற்கு ஆதரவு தெரிவித்து பெரும் பிரச்சினையில் மாட்டியவர். ஆனால் தேவேந்திர பட்னவிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அம்ருதா பட்னவிஸ் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தனர்.

இந்த நிலையில் அம்ருதா பட்னவிஸ் செய்த தவறுக்கு ஆளுநர் பதவி விலகுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *