ஆளுநர் மாளிகையின் மரியாதை?

1 Min Read

இந்தியா

மும்பை, ஜன.24- மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மனைவியான அம்ருதா பட்னவிஸ் தனது ஆண் நண்பருடன் அரசு மாளிகையில் ஆடிக்கொண்டு இருந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்ப, எதிர்க் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆளுநரின் பணி என்ன என்று தெரியாதா என கேள்வி எழுப்ப, ஆளுநர் மாளிகையின் புனிதத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் ஆளு நர் பதவி விலகவிருப்பம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது

அம்ருதா பிட்னவிஸ் அரசு பணியாளர்கள் ஊதிய விவகாரம் தொடர்பான பிரச்சினை மற்றும் மராட்டியப் பெண்கள் ஆடையில்லாமல் இருந்தால் அழகாக இருப்பார்கள் என்பதற்கு ஆதரவு தெரிவித்து பெரும் பிரச்சினையில் மாட்டியவர். ஆனால் தேவேந்திர பட்னவிஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அம்ருதா பட்னவிஸ் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தனர்.

இந்த நிலையில் அம்ருதா பட்னவிஸ் செய்த தவறுக்கு ஆளுநர் பதவி விலகுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *