வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் மறைவு

1 Min Read

மற்றவை

பட்டுக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் நேற்று (28.01.2023) இரவு 10:00 மணியளவில் சாலை விபத்தில் உயிரிழந்தார். வீரக்குறிச்சி ஆரோக்கியராஜ் கடந்த 26 ஆண்டு களாக திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கொள்கை மாறாமல் கருப்புச் சட்டைக்கு சொந் தக்காரராக இருந்தவர்.  ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக முதன் முதலில் பொறுப்பேற்று பல பொறுப் புகளில் இருந்து இறுதியாக ஒன்றிய அமைப்பாளராக தன்னைக் கழகதிற்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவரது பெற்றோர் அந்தோணி முத்து-ஆரோக்கிய மேரி. இவரது மனைவி அந்தோணியம்மாள். இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கழகத்தில் எப்பொழுது இணைந்தாரோ அன்று முதல் இறக்கும் போது வரை கருப்புச் சட்டைக்கு சொந்தக்காரர் ஆவார்.

திராவிடர் கழக தெருமுனைப் பிரச்சாரம் முதல் மாநாடு வரை கழகத் தோழர்களை பெருமளவில் அழைத்து வரக் கூடியவர். இவருடைய இழப்பு பட்டுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களுக்கு பேரிழப்பாகும். இன்று (29.1.2023) மதியம் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு – வீரக்குறிச்சி இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நிறைவேறின.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *