பொறியியல் சார்நிலை பதவிகள் 1083 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

1 Min Read

சென்னை, பிப்.5 1,083 பணியிடங் களுக்கான புதிய அறிவிப்பை டிஎன் பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நிரப் பப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.

 நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர் உள்ளிட்ட 1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு களுக்கு இன்று (5.2.2023) முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும், 04.03.2023 தேதி இந்த தேர்வுகளுக்காக விண்ணப்பிப்ப தற்கான கடைசி நாளாகும். இணைய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வ தற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மற்றும் மதியம் என 27.05.2023-ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *