பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க. தலைவர் உமாபாரதி போராட்டம்

Viduthalai
1 Min Read

போபால், பிப். 5- மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார் பா.ஜ.க. தலைவர் உமாபாரதி. பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனைக்கும் அருந்துவதற்கும் எதிரான பிரச்சாரத்தை மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான உமா பாரதி மேற்கொண் டுள்ளார். அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் ஓர்ச்சா நகரில் உள்ள மதுபானக் கடையின் முன்பு சாலைகளில் திரிந்த மாடுகளை இழுத்து கட்டி அதற்கு வைக்கோல் ஊட்டினார்.

 பின்னர், “பசும்பால் குடிக்கவும்.. மதுவை தவிர்க்கவும்” என்ற பிரசாரத்தை மேற்கொண்டார். மேலும் அவர், குடிப்பழக்கத்தை அரசாங்கம் பணமாக்கக் கூடாது என்றும் கூறினார். மது விற்பனைக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே மதுபானக் கடையில் பாஜக தலைவர் மாட்டுச் சாணத்தை வீசினார். மார்ச் 2022இல், போபாலில் உள்ள ஒரு மதுபானக் கடை மீது கல் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *