ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார் – 12.2.2023

1 Min Read
இந்தியா, திராவிடர் கழகம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் நிறுவப்பட்டுள்ள பி.பி.மண்டல் அவர்களின் சிலையை சமூகநீதிப் போராளி – தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அவ்வமையம் மாநில அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற மாநில மேனாள் அமைச்சர்கள், ஆந்திர சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். விழா அமைப்புக் குழுவின் தலைவர் ஆந்திர மாநில சட்டமன்றத்தின் கொறடா தங்கா.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி., அவர்களும், செயலாளர் டாக்டர் ஆலா வெங்கடேஸ்வரலு அவர்களும், குண்டூர் மாநகராட்சி மேயர், அனைத்துக் கட்சி சமூகநீதி ஆர்வலர்களும் உடனிருந்தனர். பலத்த கரவொலிக்கிடையே  தமிழர் தலைவர் அவர்களால் சிலை திறக்கப்பட்டது (12.2.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *