புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் ஜி.கே.எம். என்று அன்பால் அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி மறைந்தாரே!

2 Min Read

 கழகத் தலைவர் இரங்கல்

புதுச்சேரி திராவிடர் கழகத்தின் காப்பாளரும், கழகப் பணிகளுக்காக தாராள மனத்துடன் நன் கொடைகளை வழங்கி வந்த வள்ளலும், இயக்க ஏடுகளுக்குச் சந்தா அளிப் பதிலும், சேர்த்து அளிப் பதிலும்  சளையாத ஆர்வ லரும், இயக்க நிகழ்ச்சிகளில் எல்லாம் நீக்கமறக் கலந்து கொள்பவருமான முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ஜி.கே.எம். என்று ஊர் மக்களால் அன்போடும், மதிப்போடும் அழைக்கப்படுபவரான மானமிகு  கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (வயது 90) நேற்று (15.2.2023) மறைவுற்றார் என்பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.

புதுச்சேரி சென்றபோதெல்லாம் அவரை நான் சந்தித்து நலம் விசாரிக்காமல் திரும்புவதில்லை – அன்பின் கொள்கலன் அவர்!

அவர் மறைவு புதுவை மாநில திராவிடர் கழகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும்.

அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவர்தம் பெருங் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், புதுவை மாநிலக் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஜி.கே.எம். அவர்களுக்கு வீர வணக்கம்! 

                                                                                                                                        கி.வீரமணி

சென்னை                                                                                                                  தலைவர், 

16.2.2023                                                                                                  திராவிடர் கழகம்  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *