தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.364 கோடி தமிழ்நாடு அரசு அளிப்பு

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 3 தனியார் பள்ளிகளுக்கு 2021-2022-ஆம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364 கோடியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 8 ஆயிரத்துக் கும் மேலான தனியார் பள்ளிகளில் 3.98 லட்சம் குழந்தைகள் படித்து வருகின் றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணம் தனி யார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தரப்படும். 

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக் கான கல்விக் கட்டண நிலுவையை துரித மாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு தனியார்பள்ளி நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்திருந்தனர். அதையேற்று தனியார் பள்ளிகளுக்கு 2021-2022-ஆம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகைரூ.364.43 கோடிக்கான நிதியை தமிழ்நாடு அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 3.98 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இதுதவிர நடப்பு கல்வி யாண்டுக்கான (2022-2023) கல்விக் கட்டண நிலுவைத் தொகையும் விரைந்து வழங்கப் பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *