விருத்தாசலம், செப். 19- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலில், நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக் கிழமை காலை வழக்கம்போல் கோயிலைத் திறக்க வந்த ஊழியர்கள், உண்டியல் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந் தனர். உடனடியாக இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கும், விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருட்டு தொடர்பாக காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளைச் நிகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது!
Leave a Comment
