ஓ.பி.சி. மக்களின் உரிமையைக் காப்பாற்றிட குளறுபடியின்றி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திடுக! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ேவண்டுகோள்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.7– ‘‘குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! ஓ.பி.சி. மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!’’ என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–

தற்போது எடுக்கப்பட்டு வரும் Census 2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standar dized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஓ.பி.சி. பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை ஜாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள ஜாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்குஇடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் ஜாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.

இதனால் இந்தியாவில் 46 இலட்சம் ஜாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின் நோக்கமே பட்டியலினச்சமூக மக்க ளின் எண்ணிக்கையைப் போல, ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கை யையும் அவர்களது கல்வி, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான். அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும். அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் ஓபிசி ஜாதிகளின் பட்டியலை வைத்து,அதிலிருந்து மக்கள் ஜாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால் தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.

கண்துடைப்பு நடவடிக்கையாகிவிடும்!

தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகஅமைந்து விடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது.

பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

சமூகநீதியை உறுதிசெய்து,
நீதி வழங்க வேண்டும்!

கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *