“முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரி யர்கள் மூடநம்பிக்கைக் காரர்களாக இருப்ப தாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக் காரர்கள் ஆகின்றனர். ஆசிரி யர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.
நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பை களேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந் தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்”.
(27-08-1971 அன்று மணப்பாறையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சிறப்பு உரையிலிருந்து….)
