பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பேட்மின்டன் போட்டியில் சாதனை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர், செப். 5- இன்டர் பாலிடெக்னிக் அத்லெட்டிக் அசோசி யேசன் (IPAA) சார்பாக தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட்பட்ட பேட்மின்டன் பெண்கள் மற்றும் ஆண் களுக்கான போட்டி 25.08.2026 அன்று தஞ்சாவூரில் உள்ள சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி அணி பெண்கள் பிரிவிலும்  ஏ.இனியா, எஸ்.மத்தியா, எம்.தாரணி, கே.அபிநயா, எஸ்.அனுஷ்கா மற்றும் ஆண்கள் பிரிவிலும் டி.அரிகரன், எம்.சரவணன், பி.முகமது இம்ரான்கான், சி.ராஜராஜன், எம்.மாதவன் வெற்றி பெற்று வாகையர் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் மாநில அளவில் போட் டிக்கு தகுதி பெற்றது.

இக்கல்லூரியின் உடற் கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ. கிரிதரபிரசாத் அவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்களை ஒருங்கிணைத்தார்.

வெற்றி பெற்ற வீரர்களை கல்லூரி யின் முதல்வர் க.ப.வெள்ளி யங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, அனைத்து துறைத்தலை வர்களும் மற்றும் பேராசிரியர்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரி வித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *