குடியேற்றம், ஆகஸ்ட் 31- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபுவின் 50ஆவது பிறந்தநாள் விழா, குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை, பெரியார் அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலா ளர் முனைவர் வே.வினாயக மூர்த்தி இணைப்புரை வழங்கினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் தொடக்க உரையாற்றி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரி வித்தார்.
மாவட்டக் காப்பாளர் வி.சடகோபன், மேனாள் மாவட்டச் செயலாளர் கு.இளங்கோவன், வேலூர் மாநகர திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட பகுத்தறிவா ளர் கழக துணைச் செய லாளர் க.பரமசிவம், பொதுக்குழு உறுப் பினர் சி.லதா, குடியாத்தம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ப.ஜீவானந்தம், நகரச் செயலாளர் மு.பிரகாசம், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் க.சையத் அலீம், வி.ரவிக்குமார் உள் ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மருத்துவர் பழ.ஜெகன் பாபு பேசுகையில், “உங்களுடைய இந்த அன்பும் வாழ்த்துகளும் மேலும் சிறப்பாக கழகப் பணியாற்றிட எனக்கு வலிமை தருகிறது. அறி வாசான் தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கொள்கை வழியில் உங்களோடு இணைந்து செயலாற்றுவேன். இந்நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்றார்.
வேலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் இ.தமிழ்தரணி நன்றியுரை ஆற்றினார்.
