மதுரை, ஆக. 29– அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து, சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. இல்லையெனில் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்
அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை, ஆக.29 எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், பரந்தூருக்குப் பதிலாக ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் உள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இதுபற்றிப் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி, “ஓசூரில் விவசாய நிலங்களை எடுத்து விமான நிலையம் கட்டக் கூடாது. பரந்தூரைப் போல ஓசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. அதேநேரத்தில் பொருளாதாரம் வளர்வதற்கு ஓசூரில் விமான நிலையம் கொண்டு வந்தால் வளர்ச்சி உருவாகும், புதிய திட்டங்கள் உருவாகும். அதனால்தான் அங்கு நிலம் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
