திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் பங்கு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தாம்பரத்தில் (25.8.2026) ஆசிரியர் வீரமணி அய்யா கூட்டம், ‘நீட்’ எதிர்ப்பு வாகன ஊர்வல பரப்புரைக் கூட்டம் தாம்பரத்தில் முடிகிறது. தோழர்கள் அருமையாகப் பேசினார்கள். ஆசிரியர் அய்யாவிற்கு வயது 93. இன்றும் கணீரென்று ‘நீட்’ பற்றி, அதன் நோக்கம், சூட்சுமம், மேல் வர்க்கத்தினரின் தில்லுமுல்லு எல்லாவற்றையும்  விரிவாகப் பேசினார்.

வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் சிறப்பாக பேசினார். குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும், அவர் பேசிக் கொண்டிருக்கும்போது சண்முகம் சாலையில் உள்ள மசூதியில் இருந்து பாங்கு ஓதினார்கள்.  அவர்கள் முடிக்கும் வரை தன் உரையை நிறுத்தினார். கடவுள் மறுப்பாளராக இருந்தும் பிற மதத்தினரின் செயல்பாடுகளுக்கு மரியாதை கொடுப்பது திராவிடர் கழகத்தாரால்தான் முடியும்.

திராவிடர் கழகம் ஒன்றுதான்  எந்தவித எதிர்ப்பார்ப்பும், அரசியல், தேர்தல் பதவி – எவ்வித ஆசையுமின்றி மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக விழிப்புணர்வுப் பெற பாடுபடுகிறது. அதில் இளைஞர்கள் இப்போது அதிகம் பங்கு பெறுவது பாராட்ட வேணடியதாக இருக்கிறது.

‘சொல்கேளான்’ ஏ.வி. கிரி

முகநூல் பதிவு…

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *