நாளை (30.8.2026) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்சி எழுச்சியுடன் நடைபெற உள்ளது.
27-08-2026 அன்று மாலை மாநில கழக ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, விருத்தாசலம் மாவட்ட தலைவர் த. சீ.இளந்திரையன், விருத்தாச்சலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன் மாவட்ட இளைஞரணி தலைவர் செ. சிலம்பரசன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன் ஆகியோர் விருத்தாசலம் தொழிலதிபர் தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த்சோர்டியா, விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், விருத்தாசலம் மாவட்ட காப்பாளர் அ.இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து அழைப்பிதழை வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அவர்களின் பங்களிப்பை, ஒத்துழைப்பை வழங்கிட வேண்டினர் தமிழர் தலைவர் வருகைக்கு எப்பொழுதும் போல எங்களது ஒத்துழைப்பு இருக்கும் என்று மகிழ்வுடன் அவர்கள் தெரிவித்தனர்.
