திருக்குறள் குறித்த கட்டுரைகள், நூற்கள், உரைகள், சொற்பொழிவுகள், அமைப்புகள், போட்டிகள், காணொலிகள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் குரலைப் பரப்பி வரும் திருக்குறள் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் திருக்குறள் விருது வழங்கப் பெறும்.
1.) கட்டுரைகள், நூற்கள், உரைகள் 2.) சொற்பொழிவுகள், வகுப்புகள் 3.) இணையத் தளங்கள், வலைப்பூக்கள், இதழ்கள் 4.) மொழி பெயர்ப்புகள் 5.) அமைப்புகள், போட்டிகள், பிற வகைகள் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் மும்மூன்று விருதுகள் வழங்கப் பெறும்.
மேலும், எல்லா வகையிலும் திருவள்ளுவர் புகழ் பரப்பிவரும் குறள்நெறியைப் போற்றி வரும் மூவருக்கு இலக்குவனார் திருக்குறள் வாணாள் அருவினை விருது வழங்கப் பெறும். தகுதியான பிறருக்குப் பாராட்டிதழ்கள் வழங்கப் பெறும்.
இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக் கழகம், மாநிலத் தமிழ்ச்சங்கம், திருவள்ளுவர் மாமன்றம் ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம். திருக்குறள் செயற்பாட்டாளர்களை அறிந்த பிறரும் பரிந்துரைக்கலாம்.
விருது பெற விழைவோர் [email protected] மின்வரிக்கு ஆவணி 17, 2057/ செட்டம்பர் 03, 2026 ஆம் நாளுக்குள் தங்கள் பெயர், முகவரி, மின்வரி, பேசி எண்கள் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளவும்
தங்களின் திருக்குறட்பணி விவரங்களுடன் முழுமை யான தகவல்களை அய்ப்பசி 14, 2057 / 31.08.2026ஆம் நாளுக்குள் தெரிவிக்கவும் வேண்டப்படுகின்றனர்.
வாழ்த்துகளுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்,
தமிழ்க்காப்பு க்கழகம், 98844 81652
முனைவர் பா.வளன் அரசு,
மாநிலத்தமிழ்ச்சங்கம்
பொறி. இ. திருவேலன்,
இலக்குவனார் இலக்கிய இணையம்
முனைவர் மு.அழகுராசா,
திருவள்ளுவர் மா மன்றம்
