சென்னை, ஆக.21- தென்மாநில முதலமைச்சர் மாநாடு தொடர்பாக கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
புதிய முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முழு நீர்ப் பங்கையும் வழங்க கேரளா தயாராக உள்ளது. புதிய அணையின் வடிவமைப்பு, இடத் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம்; அதற்கான முழுச் செலவையும் கேரளம் ஏற்கும்.
தென் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம், விழிஞ்ஞத்தை மய்யமாகக் கொண்டு கேரளாவை முன்னணி துறைமுக நகரமாகவும், கடல்சார் பொருளாதார மய்யமாகவும் மாற்றுவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அதேவேளையில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
