22.08.2026 அன்று சிவகங்கையில் சிவகங்கை, காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற இருக்கும் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்!” திறந்தவெளி மாநாட்டிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 22.08.2026 காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மதுரை முக்கு, ஆசிரியர் கூட்டணி அலுவலகம் அருகில், காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், தலைமையில், பொதுக்குழு உறுப்பினர்கள் இர.புகழேந்தி, சு.மணிமேகலை ஆகியோர் முன்னிலையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக வருகை தர கேட்டுக்கொள்கிறோம்.
– ச.அனந்தவேல் மாவட்டத்தலைவர்
– பெரு.இராசாராம் மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகம்.
