வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் அய்ரோப்பிய வானிலை மய்யம் எச்சரிக்கை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெர்லின், ஆக.15 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அய்ரோப்பிய வானிலை மய்யம் இங்கிலாந்தின் ரீடிங், இத்தாலியின் போலோக்னா, ஜெர்மனியின் பான் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றது. உலகின் சக்திவாய்ந்த வானிலை எச்சரிக்கை மைய அமைப்புகளுள் அய்ரோப்பிய வானிலை மய்யம் மிக முக்கியமான ஒன்று ஆகும்.

இந்நிலையில், ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்குப் பிறகு இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் என அய்ரோப்பிய வானிலை மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ‘‘அடுத்த 15 நாள்களில் “பருவமழையின் தொழிற்சாலை” என்று அழைக்கப் படும் வங்கக்கடலில் தொடர்ந்து பல குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி உள்நோக்கி நகர உள்ளன. இதனால் மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் பரவலான மற்றும் தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் கன மழையால் பாதிக்கப்படும். இந்தத் தொடர் மழை மூலமாக நீர்நிலைகள் நிரம்புவதோடு, தற்போதைய காரீப் (மழைக்காலப் பயிர்கள்) சாகுபடிப் பருவத்திற்கு உகந்த சூழ்நிலை உருவாகும். எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய மழை குறைபாட்டை, இந்த பருவமழையின் தொழிற் சாலை ஈடுசெய்யும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *