வேலூர் முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய பனிக் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

வேலூர், ஆக.15- முள்ளிப்பாளையத் தில் அனுமதியின்றி இயங்கி வந்த பனிக்  கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை ஓட்டத்தின்போது திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த ஜூன் 21ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப் பேரில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற் சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வேலூர் முள்ளிப் பாளையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட பனிக் கட்டி தயாரிக்கும் ஆலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, உருளை குழாயில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆலைக்குள் சென்று அமோனியா வாயு கசிந்த உருளையின் வால்வை மூடினர். பின்னர் தலா 50 கிலோ எடை கொண்ட 6 அமோனியா வாயு உருளைகளில் இருந்த வாயுவை நீரில் கரைத்து, பாதுகாப்பாக அகற்றும் பணியில் பல மணி நேரம் ஈடுபட்டனர்.

அமோனியா வாயு கசியத் தொடங்கிய போது கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு களுக்கு ஆளான சிலர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.

இதனிடையே, உரிய அனுமதியின்றி ஆலையைத் தொடங்கியதாகக் கூறப்படும் விக்ரம் என்பவரை வேலூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், சட்டவிரோதமாக அமோனியா வாயு உருளைகளை விநியோகம் செய்தது யார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *