முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகம் அமைக்க ரூ.5.5 கோடி ஒப்பந்தம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.14 தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படும் நிலையில், நிர்வாக அலுவலக வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக ரூ.5.5 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

350 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம் பரியம்மிக்க புனித ஜாா்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வா்கள் பயன்படுத்திய இந்த அறைக்கு அருகே சட்டப்பேரவை, அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், இடப் பாற்றாக்குறை காரணமாக முதலமைச்சரின் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அத்துடன், முதலமைச்சரின் முதன்மைச் செயலர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றப்படவுள்ளன. ஏற்கெனவே, 10ஆவது தளத்தில் இயங்கிவந்த செய்தி, மக்கள் தொடர்புத் துறை பிரிவுகள் கலைவாணர் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாமக்கல் கவிஞா் மாளி கையின் 10-ஆவது தளத்தில் மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் அலுவலக வசதிகள் செய்யும் பணிகளுக்கு ரூ. 5.5 கோடியில் பொதுப்பணித் துறை ஒப்பந்தம் கோரியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மூன்று பிரிவுகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

10-ஆவது தளத்தில் உள்ள பிளாக் – 1க்கு ரூ. 2.41 கோடியும், பிளாக் – 2க்கு ரூ. 2.01 கோடியும், பிளாக் – 3க்கு ரூ. 1.12 கோடியும் ஒப்பந்தத் தொகையாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. வருகின்ற செப். 1 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் ஒப்பந்தம் கோர விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *