திருத்தணி, ஆக. 13- வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனிகண்ணணன் (வயது 65). இவர் தனது மனைவி சுசிலாவுடன் (62) நேற்று (12.8.2026) திருத்தணி முருகன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம் அருகே சுசிலா நேர்த்திக்ககடனுக்காக தீபம் ஏற்றிக்கொண்டிருந் தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. தீக்காயம் அடைந்த சுசிலா அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வு குறித்து திருத்தணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபம் ஏற்றியபோது பெண் பக்தரின் சேலையில் தீப்பிடித்த சம்பவம் திருத்தணி கோயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடவுள் காப்பாற்றவில்லையே! திருத்தணி முருகன் கோயிலில் பெண் பக்தர் சேலையில் தீ!
Leave a Comment
