ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட் டத்தைத் தொடர்ந்து, அம்மாநில அரசுப் பணித் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) நடத்திய 3 முக்கிய தேர்வுகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்வுகளில் பெரு மளவில் முறைகேடுகளும் ஆள்மாறாட்டமும் நடந்ததாகக் கூறி, அம்மாநிலத் தலைநகர் ராஞ்சியில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் திரண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மாணவர்களின் இந்த எழுச்சிமிக்க போராட் டத்தால் அரசுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. இதன் விளைவாக, சர்ச்சைக்குரிய 3 தேர்வு களையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.
தேர்வுகள் ரத்து செய் யப்பட்டது தங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி என்றாலும், இத்துடன் போராட் டத்தை கைவிடப் போவதில்லை என மாணவர் அமைப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட பின்னணி நபர்கள் மற்றும் அதிகாரி களைக் கண்டறிய இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஅய்) விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
