பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் ஹர்ஷமித்ரா மருத்துவமனையை பார்வையிட்டனர்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நாகமங்கலம், ஆக. 9- மருந்தியல் பெரியார் கல்லூரியின் மருந்தியல் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணவர்கள் நாகமங்கலம் ஹர்ஷ மித்ரா மருத்துவமனையை 08.08.2026 அன்று பார்வையிட்டனர்.

ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சசிபிரியய கோவிந்தராஜ் ஆகி யோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் புற்றுநோய் பரிசோதனை ஆய்வுக் கூடம், கதிரியக்க சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை முறைகளை நேரடியாக பார்வையிட்டனர். மேலும் மருத்துவப் பயனாளிகளின் நேரடி அணுகுமுறை, மருந்தக செயல்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர் மரு. சசிப்ரியா கோவிந்தராஜ் புற்று நோய் மருத்துவம் குறித்த பல தகவல்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்ததோடு, புற்றுநோய் சிகிச்சையில் அளிக்கப்படும் கீமோதெரபி மருந்தியல் சிகிச்சை முறைகளையும் மாணவர்களுக்கு நன்கு விளக்கி, அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் துணை இயக்குநர் முனை வர் விஜயலெட்சுமி, பேராசிரியர்கள் தினேஷ், தி.சேதுராஜா, திரிஷ்யா நாகராஜ் மற்றும் அன்சா சி. ஆகி யோர் மாணவர்களை வழிநடத்தினர்.

பாடத்திட்டம் கடந்து மருத்துவ மனையினை பார்வையிட்டது தங்களது மருந்தியல் ஆய்வுத் திறனை வளர்த்ததாக மாணவர்கள் தெரிவித்ததோடு இத்தகைய பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க. கோவிந்தராஜ், மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ குழுவினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *