சென்னை, ஜூலை 31 மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெ டுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (31.7.2026) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:
‘‘த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்…
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறல்!
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்க ளில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்ப டைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்ப டும் வரை, மின்கட்டணம் செலுத்து வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
அரசு உறுதி செய்திட வேண்டும்!
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.”
–இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
