தேசிய அளவிலான பேரிடர் மருத்துவப் பயிற்சி கருத்தரங்கம்

1 Min Read

அரசியல்

சென்னை வடபழனி தனியார் மருத்துவ மனை வளாகத்தில், தேசிய அளவிலான ‘பேரிடர் மருத்துவம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.

விஜயா மருத்துவக் குழுமம், இந்திய மருத் துவச் சங்கம் இணைந்து மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் இம்மருத்துவக் கருத்தரங்ககை நடத்தியது. இக்கருத்தரங்கத்தை கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக் குமார் தொடங்கி வைத்து பேசுகையில்:

பேரிடர் காலங்களில் நோயாளிகளை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஒன்றிய மாநில பேரிடர் குழு இணைந்து பயிற்சி வழங்குவது மருத்துவர் களுக்கு நிச்சயம் உதவும், எதிர்பாராத பேரிடர் காலங்களிலும் மருத்துவம் மற்றும் சுகாதார சேவையை தொடர்ந்து வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

இக்கருத்தரங்கில் விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் பி.பாரதிரெட்டி, பேராசிரியர் டி.சாமுவேல் மற்றும் பல்வேறு மருத்துவ மனைகளின் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *