15ஆவது புத்தகத் திருவிழா

1 Min Read

ஒசூரில் 15ஆவது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் திறந்து வைத்தார். புத்தகத் திருவிழாவில் தந்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் நிறுவனம் (கடை எண்: 71) பெரியார் புத்தகக் கடையை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் திறந்து வைத்தார்.அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” என்ற நூலை மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம், மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், பெரியார் பெரும் தொண்டர் துரை இராவணன், புத்தக திருவிழா தலைவர் ஆர்.நீலகண்டன், துணைத்தலைவர் ஆர்.சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *