
நீட்டைக் கண்டித்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் இளைஞர்கள், மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டத்தில் நேற்று (24.07.2026) மாலையும், இரவும் பங்கேற்று திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில திராவிட மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றினர். ‘நீட்’டின் வரலாறு, திராவிடர் கழகத்தின் போராட்டங்கள், தமிழ்நாட்டின் எழுச்சி ஆகியவை குறித்து உரையாற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்குப் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

