நாமக்கல், ஜூலை 23– நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் வை.நடராஜன் (வயது 92) அவர்கள் முடிவெய்தினார். அவரது உடல் நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு காலை 10.00 மணிக்கு (21.7.2026) அன்று வழங்கப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், தொழிலாளர் அணி மாநில துணைத் தலைவர் வீர.முருகன், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் வை.பெரியசாமி, அசேன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.ப.செல்வ குமார், திருச்செங்கோடு மாவட்டக் காப்பாளர் அ.கு.குமார், மாவட்டத் தலைவர் சு.சரவணன், மாவட்டச் செயலாளர் ஆனந்தகுமார் கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் மருத.அறிவாயுதம், பரமத்தி செங்கோடன், க..ச.செங்குட்டுவன். வழக்குரைஞர் அப்துல் கலாம் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
