மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை, 50 சதவீதம் பணி இலக்கு! ஊரக வளர்ச்சித்துறை புதிய வழிகாட்டுதல் வெளியீடு!

2 Min Read

சென்னை, ஜூலை 22– தமிழ்நாட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அதிகாரிகளுக்குப் புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளார்.

புதிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

பணிகளின் விவரம்: உடல் உழைப்பினை மேற்கொள்ளத் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளை முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண் மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற சிறப்புப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

சிறப்புப் பணிகள்: பணித் தளத்தில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

குழுப் பணிகள் மற்றும் பணி அளவு: பணி தளங்களில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களை மண் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். அப்போது அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணி அளவில் 50 சதவீதம் மட்டுமே செய்ய முன் அளவீடு செய்யப்பட வேண்டும்.

வேலை நேரம்: மண் வேலை சார்ந்த பணிகளை மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் மட்டுமே செய்தால் போதுமானது.

வேலை அட்டை விநியோகம்: வேலை அட்டை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி 15 நாட் களுக்குள் தனித்துவமான வேலை அட்டை வழங்கப்பட வேண்டும். விபிஜி ராம்-ஜி வழங்குவதில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது.

குறைகேள் முகாம்: மாற்றுத்திறனாளிகளின் குறைகளைத் தீர்க்கும் விதமாக பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையில் குறைகேள் முகாம் நடத்தப்பட்டு, குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த புதிய நடைமுறைகளை மாவட்ட அளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *