இலங்கை கிளிநொச்சியில் விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் 197-ஆவது திருவள்ளுவர் சிலை டாக்டர் விஜி சந்தோஷம் திறந்து வைத்தார்

1 Min Read

இலங்கையின் கிளிநொச்சி கம்பன் கலைக்கோவில் வளாகத்தில், வி.ஜி.பி. உலக தமிழ்ச்சங்கத்தின் 197-ஆவது திருவள்ளுவர் சிலையை அதன் தலைவர் வி.ஜி. சந்தோசம் திறந்து வைத்தார். இந்த விழாவில் கோவிலூர் வேதாந்த மட குருமுதல்வர் நாராயண ஞானதேசிக சுவாமிகள், பம்பாய் தெற்காசிய ஸ்டாண்டர்ட் வங்கி அதிகாரி வி. மகாலிங்கம், மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அய். விஸ்வநாதன், கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ. கணேஷ் தெய்வநாயகம், கம்பபாரதி இலங்கை ஜெயராஜ், முல்லைத்தீவு அரச அதிபர் அ. உமாமகேஸ்வரன், வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, அய்ஸ்வர்யலட்சுமி தத்துவக் கோவில் கவுரவ தலைவர் மாலா சபாரட்ணம், அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் அபிராமி கயிலாபிள்ளை மற்றும் தொழிலதிபர் திலக் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வி.ஜி. சந்தோசம், உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் சிலைகளைத் தாங்கள் நிறுவி வருவதாகவும், இலங்கையில் இதுவரை 24 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *