இலவச நோட்டு வழங்கும் விழா

1 Min Read

மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலத்தில், திராவிட மாணவர் கழகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு இலவச நோட்டு வழங்கும் விழா 12.7.2026) நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பா.முத்துக்கருப்பன் தலைமையேற்றார். நோட்டுக்களை மதுரை மாவட்டக் காப்பாளர் சே.முனியசாமி கொடையாக வழங்கினார். மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் நா.கணேசன் சிறப்புரையாறறினார். மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா. நேரு கருத்துரை வழங்கினார். மதுரை புறநகர் மாவட்ட தலைவர், த.ம.எரிமலை, மாநில மகளிர் அணி அமைப்பாளர்
பெ.பாக்கியலட்சுமி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் இரா.கலைச்செல்வி, மகளிர் பாசறை தலைவர் போ.காவேரி,, மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் பா.சதீஸ்குமார், திராவிட மாணவர் கழக அமைப்பாளர் ச.அறிவுச்செல்வி ஆகியோர் முன்னிலை ஏற்றனர். திராவிட மாணவர் கழக செயலாளர் ம.ரஞ்சித்குமார் நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *