ஒலிம்பியாட் போட்டி பெரியார் பள்ளி மாணவர்கள் பரிசுகளைக் குவித்தனர்

திருச்சி, ஜூலை 10- திருச்சி,  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வித் துறையில் தனது சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் தேர்வுகளில் மாணவர்கள் காட்டிய அபாரத் திறமையால், பள்ளிக்கு இந்த ஆண்டு ‘கோல்டன் ஸ்கூல்’ (Golden School) விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய உயரிய விருதை இப்பள்ளி தொடர்ச்சியாக ஏழாவது முறையாகப் பெற்று, தனது கல்வித் தரத்தை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.

இப்போட்டிகளில் கணினி பாடப் பிரிவில் இரண்டாம் வகுப்பு பயிலும் எஸ். ஆதித்யா மாநில அளவில் 4ஆவது இடம் பிடித்து 1,000 ரூபாய் ரொக்கப் பரிசும், கணிதப் பாடப்பிரிவில் இரண்டாம் வகுப்பு பயிலும் எஸ். முகமது அனூப் மாநில அளவில் 7ஆவது இடம் பிடித்து 700 ரூபாய் ரொக்கப் பரிசும் வென்றுள்ளனர்.

மேலும், அறிவியல் பாடப்பிரிவில் வி.தர்மிகா சிறீ (முதல் வகுப்பு) மற்றும் எம். ஆயிஷா சித்திகா (மூன்றாம் வகுப்பு) ஆகியோர் மாநில அளவில் முறையே 16 மற்றும் 20ஆவது இடங்களைப் பிடித்து சிறப்பு வெற்றியாளருக்கான பதக்கங்கள் வென்றுள்ளனர்.

இதுமட்டுமின்றி, ஓவியம், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் பல மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்:

ஓவியம்: எஸ். யாழினி, எம்.துவாரகா, பி.ஆர்.மோகிதா, எஸ்.சம்ரின், ஏ.சிறீ ஹரிஷ், ஏ.சந்தோஷ்.

ஆங்கிலம்: டி.சோனல் ஸ்டெபினா.

பொது அறிவு: எஸ்.தனுசிறீ.

கணிதம்: எம்.பரமேஷ் ஹரி பிரியன், எஸ்.முத்துகுமார், எம்.அனுக்ரஹா.

ஒட்டுமொத்தமாக இப்போட்டிகளில், முதல் சுற்றில் 126 மாணவர்களும், இரண்டாம் சுற்றில் 35 மாணவர்களும் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், இந்தப் போட்டிகளில் மாணவர்கள் பெருமளவில் சாதனை படைக்கக் காரணமாக விளங்கிய போட்டியின் ஒருங்கிணைப்பாளரும், பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியருமான எஸ்.காட்வின் உள்ளிட்டோரைப் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் மனதாரப் பாராட்டி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *