பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் உரையாடல் நிகழ்வு!

1 Min Read

தஞ்சாவூர், ஜூன் 25– வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் Periyar Foundation for Pre-incubation சார்பில் “Founder Talk” என்ற தலைப்பில் தொழில் முனைவோர் சிறப்பு உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இக்கல்லூரியில் அமைந்துள்ள வளாகத்தில் காலை 11.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்விற்கு புதுக் கோட்டையைச் சேர்ந்த Mudfield Farms Pvt. Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சபரிநிவாஸ் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் தொடங்குவதில் உள்ள சவால்கள், வாய்புகள் குறித்து மாணவர்களிடம்  கலந்துரையாடினார்.

நிகழ்விற்கு Periyar Foundation for Pre-incubation சார்பில்  Pre-incubation மேலாளர் பிரவீன் ராஜ் ஜெ வரவேற்புரை ஆற்றினார். Pre-incubation தலைமை செயல் அலுவலர் முனைவர் க.ரோஜா நிகழ்வின் நோக்கம் மற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

நிறைவாக  Periyar  Foundation for Pre-incubation சார்பில்   Pre-incubation இணை  அலுவலர் கே.கோபி நன்றியுரை ஆற்றினார். தொழில் முனைவில் ஆர்வமுள்ள 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *