கவிஞருக்குக் கழகத் தலைவர் பாராட்டு!

அமெரிக்காவில் உள்ள, ‘‘பெரியார் பன்னாட்டு அமைப்பு” 1996 ஆம் ஆண்டு முதல், சமூகநீதிக்காகப் பாடுபடுகின்ற ஆளுமைகளுக்கு, ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” எனும் பெயரில் விருது வழங்கி, சமூகநீதிக்குப் பெருமை சேர்த்துவருகிறது. இதுவரை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் முதல், சமூகநீதிக்கான செயல்பாட்டாளர் வித்யா பூசன் ராவத் ஆகியோர் வரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டுக்கான விருதாளராக, திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி,பூங்குன்றன் தேர்வு செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிஞருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், எமரால்டு பதிப்பகம் முனைவர் கோ.ஒளிவண்ணன் (சென்னை, 22.06.2026).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *