பெரியாரின் இடத்தில் நிற்பவர்!

1 Min Read

திராவிடர் கழகம்

திராவிடத் தீக்குச்சிகளை
அடைகாத்துக் கொண்டிருக்கும்
தீப்பெட்டியைப் போன்றவர்
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்!
அன்று –
பெரியாரிடத்தில் நின்றவர்!
இன்று –
பெரியாரின் இடத்தில் நிற்பவர்!
தினமும்
கருப்புச் சட்டையும்
கருத்துச் சண்டையும்
போட்டுக் கொண்டே இருக்கிற போராளி!
அவர் சட்டைபோடுவதும்
சண்டை போடுவதும் ஒன்றுக்காகத்தான்!
‘மெய்யைக்‘ காப்பாற்றுவதற்காக!
சுயமரியாதைச் சுடருக்குத் திரியானவர்! – நம்
பகுத்தறிவுப் பகலவனைச் சுமந்து பரியானவர்!
தன்மான ஆடைநெய்யும் தறியானவர்! – இவர்
தமிழரின் மானத்துக்கு முகவரியானவர்!
சாத்திரக் குப்பைகளுக்கு எரியானவர்! – இன்று
சமூகநீதிச் சண்டைக்கு இவர்தான் சரியானவர்!
தஞ்சை உபயதுல்லா பிறந்தநாள் விழாவில் ஆசிரியர் பற்றி…

தஞ்சை இனியன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *