குமரி மாவட்ட கழகம் சார்பாக நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

கொட்டாரம், ஜூன் 12- குமரி மாவட்ட கழக சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொட்டாரம் சந்திப்பில் நடைபெற்றது கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கி உரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர் வரவேற்புரை யாற்றினார் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலாளர் பா. பாபு வாழ்த்துரை வழங்கினார் கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி முன்னிலை வகித்தார் கழக சொற்பொழிவாளர் பொன் அருண்குமார் திராவிடர் இயக்கத்தினுடைய தொண்டுகள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய சமூக நீதிப் பணிளையும், முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகள் பெரியாரிய பெரும்பணிகளை விரிவாகப் பேசி சிறப்புரையாற்றினார்.

கழகத் தோழர்கள் மு.பால் மணி, சு.இந்திரா மணி தி.மு.கழக பொறுப்பாளர்கள் பாலசுப் பிரமணியம், ஞானசேகர் வினோத், ஆறுமுகம், ஜானி, தேவகி, கங்காதரன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட கழக துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் நன்றி கூறினார்.

கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு கூட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *