தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முப்பெரும் விழா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

கந்தர்வக்கோட்டை, மார்ச் 25-  புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக நீர் தினம்,  உலக வானிலை தினம் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்ட மாண வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என முப்பெரும் விழா நடைப் பெற்றது. 

இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜய லட்சுமி தலைமை வகித்து பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி, உலக வானிலை அமைப்பு 1950 மார்ச் 23 அன்று உலக வானிலை அமைப்பை நிறுவும் உடன்படிக்கை நடை முறைக்கு வருவதை நினைவுகூருகிறது. 

உலக வானிலை நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று கொண் டாடப்படுகிறது மற்றும் உலக வானிலை அமைப்பு  மாநாட்டின் 23 மார்ச் 1950 அன்று நடைமு றைக்கு வருவதை நினைவு கூரும். சமூகத்தின் பாது காப்பு மற்றும் நல்வாழ் வுக்கு தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைக ளின் இன்றியமையாத பங்களிப்பை இது காட்டு கிறது மற்றும் உலகெங்கி லும் உள்ள செயல்பாடு களுடன் கொண்டாடப் படுகிறது. காலநிலை அல்லது நீர் தொடர்பான பிரச்சினைகளை பிரதிபலிக்கின்றன.

நீரின் தேவைகள் குறித்தும் “நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு” என வள்ளுவர் கூறியது போல நீர் நம் வாழ்வில் முக்கிய அங்கமாகும்.

மாணவர்கள் எவ் வாறு நீரினை பாதுகாக்க வேண்டும்  பேசினார்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பாக்யராஜ் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்ட கந்தர்வக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் வட்டார தலைவர் ரக மதுல்லா பேசும்போது:

சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான அய்க்கிய நாடுகளின் மாநாடு 1992ஆம் ஆண்டு ரியோ ஜெனிரோவில் நடை பெற்றது. 

தண்ணீருக்கான பிரச் சினைகளைத் தீர்க்கவும், சரி செய்யவும் மார்ச் 22ஆம் நாளை ‘உலக தண்ணீர் தினம்’ என்று கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. 

அதனால் அய்க்கிய நாடுகளின் பொது சபை 1993ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் உலக தண்ணீர் தினத்தை கொண்டாட வடிவமைத்துக் கொடுத் தது.

நீர்வளத்தைக் காப்ப தும், அதனை பெருக்கு வது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத் துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.

பூ‌மி‌யி‌ல் நன்னீரின் ‌விழு‌க்காடு 3%ம‌ட்டுமே!

உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப் படுகிறார்கள் என்று பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா அறிவியல் இயக்கம் மாணவர்களுக்கு துளிர் திறனறிவுத் தேர்வு விஞ்ஞான சிறகு மாத இதழ், மந்திரமா? தந்திரமா? ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

மாணவர்கள் விஞ்ஞான சிறகு இதழ்களை வாசிக்க  வேண்டும் என வும் பேசினார். இந்நிகழ் வில் மலா, மைவிழி, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிறைவாக பட்டதாரி ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *