தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் திறக்க அனுமதி இல்லை சுகாதாரத் துறை தகவல்

0 Min Read

சென்னை, மே 25 – தமிழ்நாட்டில் புதிதாக 8000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பங்களில் தகுதியுள்ள மருத்துவமனை களுக்கு மட்டும் தற்காலிக சான்றிதழ் வழங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக 8000 கிளினிக், மருத்துவமனை திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக செய்தி பரவும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை இதைத் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *