தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடர்கிறது! பிரேமலதா மீண்டும் உறுதி

விருத்தாசலம், மே 23- திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உறுதிபடத் தெரிவித்தார்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற பிரேமலதா, வாக்களித்த வாக்காளர்களுக்கு கடந்த 3 நாள்களாக தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தும், முக்கிய அலுவலகங்களை ஆய்வு செய்தும் வருகிறார்.
அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
விருத்தாசலத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். இனிவரும் காலங்களில் தொகுதியில் தங்கியிருந்து, அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்ற பாடுபடுவேன். சென்னையில் பெரும் பலான இடங்களில் மின் வெட்டு இருப்பதாக அறிகிறேன்.
விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு அவகாசம் கொடுப்போம். பொறுத் திருந்து பார்க்கலாம். இவ்வாறு கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக, அய்யுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சரவையிலும் இடம் பிடித்திருப்பது தொடர்பாக கேட்டபோது, “அவர்களது விருப்பம். அதை விமர்சிப்பதில் அர்த்தமில்லை.
எங்களைப் பொறுத்த வரை திமுக கூட்டணியில் தொடர்கிறோம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *