பெரம்பலூர், மே. 18– பெரம்பலூர் மாவட்ட கழக சார்பில், மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்டச் செயலாளர் விசயேந்திரன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் ஒரத்தநாடு குணசேக ரன் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது குறித்தும், ‘விடுதலை’ நாளேட்டிற்கு சந்தா சேர்ப்பது குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 29.05.2026 அன்று பெரம்பலூர் வருகையின்போது வரவேற் பளிப்பது குறித்தும் சிறப்பு ரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் எசனை நடராசன் அவர்களது பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு 29.05.2026 அன்று மாலை வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெரம்பலூரில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
ஜூன் திங்களில், மாவட்டத்தின் ஒன் றிய, நகரங்களில் கொள்கை விவாத தெருமுனை கூட்டங்கள் நடத்து வது என முக்கிய இரண்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில மாணவர் கழகச் செயலாளர் செந்தூர பாண்டியன், மாவட்ட செயலாளர் விசயேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட தலைவர் நடராசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
