அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்: திருநங்கைகளின் கோரிக்கை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 17 திருநங்கைகள் விழிகள் அமைப்பின் செய லாளர் துர்காசிறீ கூறுகையில், “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு ரூ.1,000 கிடைத்தது. மேலும் பலர் விண்ணப் பித்துள்ளனர். ஆட்சி மாற்றத்தால் அந்த விண்ணப்பங்கள் இன்னும் பரிசளிக்கப்படாமல் உள்ளன. விரைவில் பரிசீலனை செய்து திருநங்கைகளுக் கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். மேலும், மகளிர் இலவச பேருந்து சலுகையை திரு நங்கைகளுக்கும் விரிவாக்க வேண்டும். 2019-இல் சென்னை கண்ணகி நகரில் ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியிருக்க இயலாத சூழல் உள்ளதால் வேறு இடங்களில் குடியிருப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 22,634 திருநங்கைகள் இருப்பதாகவும், தென் சென்னையில் மட்டும் 1,954 பேர் இருப்பதாகவும், இவர்களில் 40 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பதால் அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி போன்ற இடங்களில் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *