பெய்ஜிங், மே 17 சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் சிரமத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக, ஒரு வாரத்திற்கு பொம்மையை ஒரு குழந்தையை போல் பராமரித்து கொள்ள வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. சுமார் 2.5 கிலோ எடையுள்ள பொம்மையை சுமந்து கொண்டே சாப்பிடுவது உள்ளிட்ட வேலைகளை செய்த பின் மாணவர்களின் நடத்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் இது திருமணம் செய்ய பயப்படும் நிலைக்கு மாணவர்களை தள்ளும் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
