அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் தி.மு.க. அமைச்சரவை முடிவு (16.05.2006)
தமிழ்நாடு ஆன்மிக மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, “அனைத்துச் ஜாதி யினரும் அர்ச்சகராகலாம்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை, 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசு எடுத்தது. தந்தை பெரியாரின் நீண்ட கால கனவை நனவாக்கும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
