கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா-கருத்தரங்கம்

கிருட்டினகிரி, மே 12- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில்  29/04/2026-புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – கருத்தரங்கம்  கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன்    தலைமை வகித்துப் பேசினார்.

மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு  திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோ. திராவிட மணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

பகுத்தறிவாளர் கழக  மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் தொடக்க உரையில் புரட்சிக்கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.

பாரதிதாசனின் தமிழ் உணர்வு என்ற தலைப்பில் மு.சந்தோஷ்குமார் கருத்துரை வழங்கினார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக நிர்வாகி இராம.சகாதேவன்  பெரியா ரும் – பாரதிதாசனும் மற்றும் பாரதிதாச னின் பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கி  நிறை வுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்  கி.முருகேசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி, கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராஜா, கார்த்திகேயன் உள்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னதாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை யொட்டி அவரது படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அவரது பிறந்தநாளில் பிறந்தநாள் காணும் மாவட்ட தி.க.துணைத் தலைவர் வ.ஆறுமுகத்திற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க.துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணனன் ஆகியோர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கிய சந்தோஷ்குமார், கல்லூரி மாணவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு பெரியார் நூல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக  பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *