சென்னை, மே 10 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் அதாவது, 83 சதவீதத்திற்கும் அதிகமா னோர் வைப்புத் தொகையை இழந்துள் ளனர் என தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரம் சிறிய கட்சி களும், சுயேச்சை வேட்பாளர்களும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ளும் சவால்களை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
குற்றப் பின்னணி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற் போதுள்ள 233 உறுப்பினர்களில் நால்வரில் ஒருவர் மீது தீவிரமான கிரிமினல் வழக்கு இருப்பதாக வேட்புமனுத் தகவல்களின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிரிமினல் வழக்குகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் கொண்ட கட்சியாக தவெக முதலிடத்தில் உள்ளது.
தவெகவின் 107 சட்டமன்ற உறுப்பினர் களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன; அடுத்த இடங்களில் திமுக (37 பேர்), அதிமுக (33 பேர்) ஆகியன உள்ளன.
அய்ந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய குற்றங்கள், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் வன்முறை, ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தீவிர வழக்குகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையிலும் தவெக 19 பேருடன் முதலிடத்தில் உள்ளது. வெற்றிப் பெற்ற 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 193 பேர் பெரும் பணக்காரர்கள்; தவெகவில் மட்டும் 77 பேர் என்பது தகவல்களின்படி தெரிய வந்துள்ளது.
