கொல்கத்தா, மே 8 மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறியப்படும் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத்தை, அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
கொல்கத்தா அருகே மத்யம்கிராம் பகுதியில் காரில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதில், 3 குண்டுகள் பாய்ந்து சந்திரநாத் உயிரிழந்துள்ளார்.
சுவேந்து அதிகாரியின் நிழல் போல செயல்பட்டுவந்த அவரது பி.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
