சென்னை, மே 2- அய்சிஎஸ்இ மற்றும் அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டு நடந்த அய்சிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வில் 3,434 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3,428 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 99.8 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அய்எஸ்சிஇ 12ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 1501 மாணவிகள் தேர்வு எழுதியதில் 1500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 99.9 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களில் 1804 பேர் தேர்வு எழுதியதில் 1802 பேர் தேர்ச்சி பெற்று 99.9 சதவீதம் தேர்ச்சி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதுகுறித்து ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியை சம்யுக்தா கூறும்போது, எங்கள் பள்ளியல் 400 பேர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியதில் 392 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.
இதேபோல், அய்சிஎஸ்இ, அய்எஸ்சிஇ தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 99.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் அய்சிஎஸ்இ, அய்எஸ்சிஇ தேர்வுகளில் மாணவர்கள் 100க்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
