தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! கு.செல்வப்பெருந்தகை பேட்டி

1 Min Read

சென்னை, மே 2- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச் சின்னத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து, மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.செல்வம், கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், பானுப்ரியா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து, கு.செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. மக்கள் அளித்துள்ள முடிவை விரைவில் காண்போம். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி.

பிரதமர் மோடி, தமிழ்நாடு வந்தால் தமிழர் நாகரீகம், தமிழர் பண்பாடு என புகழ்ந்து பேசுவார், ஆனால் பீகாருக்கு சென்றால் தமிழர்களை திட்டி பேசுவார். இப்படி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பேசுபவர் தான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். இங்கு பாசிச ஆட்சிக்கு எந்த காலத்திலும் இடமில்லை. வருமான வரித்துறை சோதனை குறித்து மேலும் ஆதாரங்களை விரைவில் தொடர்ச்சியாக வெளியிடுவேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும், இல்லையென்றால் ஆளுங்கட்சியாக இருக்கும்’ என்று பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *