வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்கள் முன்னிலையில் காப்பறைகள் திறக்கப்படும் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

2 Min Read

சென்னை, ஏப்.25  தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பறைகள்:

கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் (EVM) மற்றும் VVPAT கருவிகள் அனைத்தும், வேட்பா ளர்கள் மற்றும் மத்தியப் பார்வை யாளர்கள் முன்னிலையில் சீல் வைக் கப்பட்டுள்ளன. இவை தற்போது
–- இரண்டடுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு மற்றும் ஒரு படைப்பிரிவு அளவிலான பாதுகாப்புப் படை யினரின் கண்காணிப்பில் உள்ளன.  கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி யுடன் கூடிய காப்பறை களில் (Strong Rooms) பாதுகாப் பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த முழு நடைமுறைகளும் முழுமையாக காட்சிப் பதிவாக செய்யப்பட்டுள்ளன.

  1. வேட்பாளர்களின் நேரடி கண்காணிப்பு:

காப்பறைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேட்பாளர்களுக்குப் பல்வேறு வசதிகள் செய்து தரப் பட்டுள்ளன:

வேட்பாளர்கள் அல்லது அவர் களின் பிரதிநிதிகள் பாதுகாப்பு வளையத்தின் வெளிச்சுற்றில் தங்கி நேரடி கண்காணிப்பில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்காக காப்பறைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளைப் பார்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை அன்றைய நடைமுறை:

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, காப்பறைகளைத் திறக்கும் போது கீழ்க்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்:

மத்தியப் பார்வையாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதி நிதிகள் ஆகியோர் முன்னிலையில் மட்டுமே காப்பறைகள் திறக்கப்படும்.

இந்த நிகழ்வு முழுமையாக காட்சிப் பதிவு செய்யப்படும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பாது காப்பு நெறிமுறைகளின்படி அனைத்து இயந்திரங்களும் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இது குறித்து வேட்பாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ள தாகவும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *